search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா கார் மோதல்"

    குன்னூர் அருகே சுற்றுலா கார் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை:

    மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அமர்நாத் கோஸ் (வயது 39). இவரது மனைவி பரோலில் கோஸ் (25). இவர்களது மகன் மோதிஸ் (3).

    இவர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்வது என முடிவு செய்தனர். இதற்காக அங்குகிருந்து புறப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனர். அங்கு தனது நண்பரான கொலாய் கோலி (36) என்பவரது வீட்டில் தங்கினர்.

    பின்னர் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். இதற்காக சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.

    ரெயில் இன்று காலை மேட்டுப்பாளையம் வந்ததும் ஒரு வாடகை காரில் ஊட்டிக்கு சென்றனர். காரை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சபீக் (22) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கார் மரப்பாலம் அருகே 13-வது கொண்டடை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

    இதில் காரில் சுற்றுலா வந்த அமர்நாத் கோஸ், அவரது மனைவி பரோலில் கோஸ், மகன் மோதிஸ், சென்னையை சேர்ந்த கொலாய் கோலி, இவரது மனைவி தீபிகா (27), டிரைவர் சபீக் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு குன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து வெலிங்கடன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவதானப்பட்டி அருகே சுற்றுலா கார் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் குண்டுபட்டியை சேர்ந்த ரவீந்திரன் மகன் பிரதீப்குமார் (வயது27). இவர் காய்கறிகள் ஏற்றி செல்லும் வேன் ஓட்டி வந்தார். நேற்று கொடைக்கானலில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    காமக்காபட்டி செக் போஸ்ட் அருகே மற்றொரு வேன் டிரைவரான செக்காபட்டி மேலத்தெருவை சேர்ந்த சின்னச்சாமி நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்து பேசுவதற்காக தனது வேனை ஓரமாக நிறுத்தி விட்டு பிரதீப்குமார் கீழே இறங்கி வந்தார்.

    அப்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வாகனங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தன. ராஜபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வந்துகொண்டிருந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து செக்போஸ்ட் மீது மோதி அங்கு நின்று கொண்டிருந்த பிரதீப்குமாரையும் கீழே தள்ளியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேகமாக வந்த கார் மோதியதில் சின்னச்சாமி மற்றும் முத்தரசன் என்பவர்களும் படுகாயம் அடைந்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×